Monday, September 26, 2011

106. துறந்த இல்லறம்-சிறந்த துறவறம்

இல்லறம் துறவறம்
இரண்டும் நல்லறம்
ஆயினும் இல்லறம்
அமைய சிறப்புடன்
வேண்டும் துறவறம்
சற்றே அவரிடம்
"நான்" என்ற
ஆணவம் துறந்து
"நமதே" என்ற
எண்ணம் அமைந்து
பிறர்க்கு உழைக்க
தன் "நலம்" பேணி
அனைவரும் வழ்வில்
அனைத்தும் பெற்றிட
மனதில் "துறந்து"
வாழ்வில் உயர்ந்து
ஒன்றாய்க் கூடி
இன்பம் துய்த்து
வாழ்ந்தால் இல்லறம்
என்றும் உயர்ந்திடும்
துறவறம் என்பதும்
துறப்பது அல்ல
துணிவாய் சில
தேவையை மறுத்து
பிறர்க்கு என்றே
வாழ்வைத் தந்து
உலகம் உய்ய
தவமே இருந்து
தன்னுள் தானே
நிறைவைக் கண்டு
தனித்தே வாழ்ந்து
தாழ்வுடன் இருந்து
அமைதி காப்பது
சிறந்த துறவறம்
25-09-2011. குருகுலம்.

No comments: