Thursday, February 16, 2023

 1476 to 1480

1476

 

 

எதிர்பார்த்த ஒன்று 

இது வென்றாலும்

எப்படி இதயம் 

இதையும் தாங்கிடும் 

 

நொந்து நம்மை 

பெற்றெடுத்தாளே, நாம்

நோகமல் நம்மை 

காத்து வந்தாளே

 

சுமைகள் நமக்காக 

பல சுமந்தாளே 

துன்பங்கள் பலவற்றை 

தாங்கி நின்றாளே

 

அடித்துத் திருத்தி 

வளர்த்ததும் அவளே

அணைத்து தாங்கி 

ஆதரித்தாளே 

 

செல்லம் கொடுத்து 

கெடுத்ததும் அவளே

ஆனாலும் கண்டிப்பு 

காட்ட மறவாளே 

 

ஒன்றா இரண்டா 

எத்தனை சொல்ல 

அன்னைக்கு ஈடாக 

யாரைதான் சொல்ல 

 

ஒரு பேச்சுக்கு நாம் 

பலரை சொன்னாலும்

மன சாட்சிக்கு தெரியும்

உண்மை எதுவென்று

 

தெய்வமே தாயின்முன் 

தோற்றிடும் போது

பாடுள்ள மாந்தரின் 

நிலையென் னாவது 

 

அன்னையா தெய்வமா 

என்கின்ற வாதம்

இடையிலே தேவை 

இல்லாத ஒன்று

 

எங்கும் நிறைந்த 

இறைவனே ஆயினும்

அன்னையின் வடிவிலே

காட்சியும் தருகிறான் 

 

தாயும் ஆனவன் 

என்றபெயர் கொண்டு 

தாயிடம் தங்கியே 

ஆளுகை செய்கிறான்

 

அவளுடல் ஒருநாள்

போனபின்னாலும் 

அன்புக்கு அவளையே 

அடையாளம் காட்டுறான்

 

இத்தனை சிறப்புகள் 

பெற்றநம் அன்னை

போனதை எப்படித் 

தாங்கிடும் இதயம்

 

ஆனாலும் தேறிட 

அருளுமேத் தருவான்

அன்னையின் நினைவாலே 

ஆறுதல் தருவான் 

 

சுவாமிமலை, 8-1-2023 (9-1-2023), இரவு 12.10

 

1477 உறவில் வாழ்கிறாய்

 

எனக்கிது இழப்பாய்

இருந்த போதும்

உனக்கது விடுதலை

தந்தது என்றால்

எனக்கது போதும்

வேறென்ன வேண்டும்

எங்கோ இருந்து

நீவாழ வேண்டும்

 

உயிருக்கு உடலைத்

தந்த இறைவன்

இரண்டையும் இப்போ

ஏனோ பிரித்தான்

பலவித காரணம்

நாம் சொன்னாலும்

படைத்தவன் அதற்கு

பதிலைத் தாரான்

 

உடலொடு போனது

நமது தொடர்பு

எங்குயிர் போனது

நமக்குத் தெரியாது

ஆனால் உறவு

மட்டும் தொடருது

எதனோடு என்று

எவருக்கும் தெரியாது

 

பெற்றோர் பிள்ளை

உடன்பிறப் பென்று

சொந்தம் பந்தம்

சூழ வாழ்வது

இறைவனே அமைத்த

நியதி என்பதால்

இந்த உறவு

இறந்தும் தொடருது

 

கொடுத்ததை எடுத்தான்

தடுக்க முடியாது

உறவை அளித்தான்

பிரிக்க முடியாது

அளித்ததைக் காத்து

எடுத்ததை ஏற்று

வாழ்வது ஒன்றே

நமக்கு ஏற்றது

 

ஆகவே அம்மா

நீயும் இருக்கிறாய்

அன்னை என்ற

உறவில் வாழ்கிறாய்

மீண்டும் காணும்

வாய்ப்பற்றுப் போயினும்

நிரந்தரமாக இந்த

உறவில் இருப்பாய்

 

குருகுலம், 13-1-2023, காலை 5.15

 

 

1478 Both became mad

 

Once we both

Became mad

Who has to give treatment

To whom

 

I babble like a

Mad person

As intoxicated

With bhakti

 

As you too

Get trapped in the net of bhakti

You are lamenting

 Seeing my condition

 

As I lament

Thinking about my mother

You became sad

Thinking about my condition

 

Who has to give

Comfort to whom

And how we both live

By encouraging each other

 

You know well that

If you bestow bhakti

This alone

Will happen

 

Keeping bhakti

Above buddhi

You made the buddhi

To be under the control of bhakti

 

Bhakti won’t deny

What buddhi says

Buddhi won’t reject

What bhakti does

 

If both join together

And began to act like this

What else will happen

Other than becoming mad

 

Fortunately as

Both our condition

Became  

The same now

 

As I listen to you

And you listening me

We both understood

Each other’s mind

 

It is better to live

In this condition for sometime

As it is

Good for both of us

 

As others keep away from us

Seeing our condition

We both can live

Without disturbed by others

 

If this became

The permanent condition for us

Then we both can

Become mad [persons]

 

Gurukulam, 16-1-2023, 8.00 p.m.

 

Others might think that I am going overboard and still continue to cry for my mothers.  It is not mere emotional attachment but an umbilical relationship that makes me cry, often thinking about my mother as I miss her very much.  But as the Lord is there to understand He too joins me in this madness as He gets trapped in the net of bhakti.  So after crying for sometimes when I began to pour down my heart I wrote this song expressing my present condition.

 

1478 இருவரும் பைத்தியம்

 

இருவரும் பைத்தியம்

என்றான பின்னே

யாருக்கு யார்

வைத்தியம் பார்ப்பது

 

பக்தியின் பைத்தியம்

தலைக்குமே ஏற

பித்தனைப் போலவே

பிதற்றுறேன் நானும்

 

பக்தியின் வலையிலே

அகப்பட்டதாலே

என்னிலை கண்டு

புலம்புறாய் நீயும்

 

தாயை எண்ணி

நானுமே புலம்ப

என்னிலை எண்ணி

நீயுமே வருந்த

 

யாருக்கு யார்

ஆறுதல் சொல்வது

எவர்தேற்ற எவராற்ற

இருவரும் வாழ்வது

 

பக்தியை தந்தால்

இதுபோல் நடக்கும்

என்பதும் உனக்கு

நன்குமேத் தெரிந்தும்

 

புத்தியின் மேலாக

பக்தியை வைத்து

புத்தியை பக்திக்கு

ஆட்பட வைத்தாய்

 

புத்தி சொல்வதை

பக்தி மறுக்காது

பக்தி செய்வதை

புத்தி ஒதுக்காது

 

இரண்டும் இணைந்து

இப்படிச் செய்தால்

பைத்தியம் பிடிக்காது

வேறென்ன ஆவது

 

நல்ல வேளை

இருவரின் நிலையும்

இப்போது ஒன்றாக

இருந்திடும் போது

 

நீசொல்ல நான்கேட்க

நான்சொல்ல நீகேட்க

இருவரின் மனதும்

ஒருவாறு புரிந்தது

 

இந்த நிலையிலே

சிலகாலம் வாழ்வது

உனக்கும் எனக்கும்

மிகமிக நல்லது

 

இருவரின் நிலைகண்டு

பிறருமே ஒதுங்க

எவ்வித இடையூறும்

இன்றியே வாழலாம்

 

இதுவே நிரந்தரம்

என்றுமே ஆனால்

பைத்தியம் ஆகவே

நாமும் மாறலாம்

 

குருகுலம் 16-1-2023, மாலை, 8.00

 

1479 உனது பொறுப்பு

 

இந்த வாழ்வு

நீதந்த ஒன்று

இதனை எப்படி

வாழணும் என்று

 

சொல்லித் தந்து

வாழ வைப்பாய்

துணையாய் நீயும்

வாழ வருவாய்

 

 

என்மனம் ஒன்று

சொல்லிய போதும்

எனக்கெது நல்லது

என்பது தெரியாது

 

உன்மனம் என்ன

எண்ணுது என்று

எனக்கு என்றும்

நிச்சயம் புரியாது

 

இன்றைய வாழ்வு

போனது நன்று

நாளைய வாழ்வும்

உனது என்று

 

வாழ மட்டும்

எனக்குத் தெரியும்

வாழ வைக்கும்

உனக்குப் புரியும்

 

ஆகவே நாளைய

வாழ்வு பற்றி

எதற்காக நான்

இன்றே எண்ணணும்

 

இன்றுபோல் நாளை

சென்றிட வேண்டும்

என்று மட்டும்

வேண்டிட வேண்டும்

 

அந்த கவலையும்

உனதுமே ஆச்சு

அதுபற்றி எனக்கு

இனியென்ன பேச்சு

 

ஒவ்வொரு நாளும்

நீதரும் வாழ்வை

வாழ்ந்து முடிப்பதே

என்கடன் ஆச்சு

 

அந்த பணியை

இன்று செய்து

நாளை வாழ

ஆயத்தம் செய்து

 

தூங்க நான்

போகும் முன்னே

நன்றி சொல்ல

உன்முன் வந்தேன்

 

மீண்டும் நாளை

வாழ்வு தந்தால்

முடிந்த மட்டும்

வாழ்ந்து முடிப்பேன்

 

இன்று இரவே

என்னை அழைத்தால்

நன்றி கூறி

வந்து சேர்வேன்

 

இதுவே எனது

இறுதி பாடல்

என்று இருந்தால்

மிகவும் நல்லது

 

மீண்டும் பாடல்

எழுத வைத்தால்

முழுக்க முழுக்க

உனது பொறுப்பு

 

குருகுலம், 23-1-2023, இரவு 11.15

 

As my mother has gone I began to think what will happen to my future life, particularly, if God allows me to live long enough.  As I began to imagine about various possibilities I cannot come to one conclusion.  Of course I always believe living ‘one day at time’ and though not anxious about my future, still the thought about future life I cannot avoid.  However after thinking various options when I sat calmly I wrote this poem as my prayer to the Lord as it is His responsibility I need not even think or plan about my future but has to live as per my principle of ‘one day at time’.

1480 வலி வேண்டும்

 

 

நாலு வாரம்

ஓடிப் போச்சு

நாளும் பொழுதும்

பறந்து போச்சு

 

ஆயினும் உனது

நினைவு மட்டும்

ஆணிபோல் மனதில்

பதிந்து இருக்கு

 

சென்ற மாதம்

இருந்த உன்னை

இந்த மாதம்

இழந்த போதும்

 

அன்னை என்ற

உறவு மட்டும்

என்றும் என்னுடன்

இணைந்து இருக்கும்

 

தாய்சேய் உறவு

போல ஒன்று

அவனி மீது

ஏதும் இல்லை

 

தொப்புள் கொடியில்

தொடங்கிய உறவு

துண்டித்து செல்ல

வாய்ப்பு இல்லை

 

உன்னை எண்ணி

கண்ணீர் சிந்தும்

என்மனம் ஆற

வழியும் இலை

 

இழப்பின் வலியை

தாங்கும் வலிமை

எனக்கு ஏனோ

நீதர வில்லை

 

அந்த வலியில்

உன்னை மீண்டும்

உணரும் பேறு

கிடைக்கும் போது

 

இந்த வலியும்

எனக்கு வேண்டும்

இதிலே உன்னை

காண வேண்டும்

 

நாளும் பொழுதும்

ஓடிப் போகும்

காணும் உலகின்

காட்சி மாறும்

 

நெஞ்சம் ஒன்று

இருக்கும் மட்டும்

நினைவு மட்டும்

அதிலே இருக்கும்

 

அந்த நினைவு

நெஞ்சை அழுத்த

அழுது கண்ணீர்

நானும் சிந்த

 

இந்த தேகம்

இருக்கும் மட்டும்

உன்உறவு என்னை

தேற்றி ஆற்றும்

 

குருகுலம், 23-1-2023, இரவு 11.50 pm.

 

When I think about my mother some kind of burden pressing my heart and I began to shed tears immediately. Particularly as my mother passed away exactly four weeks before and I was sitting next to her body whole night often crying, as I recalled the incident [as I live and sleep in the same room also now] unable to control me I began to cry loudly.  Fortunately I am alone and there is neighbors to me. So I have the freedom to cry loudly.  Though I retired to bed, unable to sleep I got up and wrote this poem to pour down my heart that one way this pain is also good for me as it is working as a healing therephy.


No comments: