Thursday, February 16, 2023

 1456-1460

1456 நன்றிகள் கோடி

 

ஆயிரம் சோதனை

ஆயிரம் வேதனை

அனைத்தையும் கடந்து

உன்னிடம் வந்து

 

துதித்துப் பாடிட

அருளைத் தந்து

தினம் தினமுன்னை

தொழுதிட வைத்தாய்

 

கருவில் இருந்து

கல்லறை வரையில்

வந்திடும் சோதனை

எண்ணிடப் போமோ

 

ஆயும் நீசெய்த

நன்மை அனைத்தையும்

எண்ணிட என்னிடம்

எண்களும் உண்டோ

 

எதிர் மறையாக

எண்ணிட வென்று

ஆயிரம் ஆயிரம்

காரியம் உண்டு

 

ஆனால் உன்னிடம்

வந்திடும் போது

நேர்மறையாக

மாறிடும் நன்று

 

சோகத்தில் திளைக்க

சோம்பிக் கிடக்க

ஆயிரம் எண்ணம்

மனதிடம் உண்டு

 

அந்த மனதையும்

மாற்றிடும் வல்லமை

ஐயனே உனக்கு

நிச்சயம் உண்டு

 

ஒருநொடி உன்னை

உள்ளத்தில் நினைக்க

என்னிலே தோன்றும்

எழுச்சி எத்தனை

 

அந்த நேரம்

வந்திடும் பரவசம்

அதிலே மூழ்கி

திளைக்கும் போது

 

எனக்கென நீயும்

படைத்த உலகும்

அதிலே வாழ

தந்த வாழ்வும்

 

நல்லது என்று

நாவுமே சொல்ல

நானுனைப் பாடிட

அதிலே மகிழ

 

தந்த அருளுக்கு

நன்றிகள் கோடி

சொல்லிட வந்தேன்

திருவடி தேடி

 

குருகுலம், 3-12-2022, இரவு, 2.30 a.m.

1457 தந்தால் நல்லது

 

 

சொன்னால் கேட்கேன்

என்றுமே சொன்னால்

சொல்லிடத் தேவை

எனக்குமே ஏது

 

கேட்பதைத் தந்திட

நீயுமே மறுத்தால்

கேட்டிடத் தேவை

எனக்குமே ஏது

 

வள்ளளைப் போல

வாக்குகள் எத்தனை

தந்தாய் நீயும்

என்பதை எண்ணி

 

அவற்றை நம்பி

உன்னிடம் வந்தால்

ஆயிரம் சாக்குகள்

சொல்வதும் எதற்கு

 

வாக்குகள் தருவாய்

என்றுமே எண்ணி

உன்னிடம் நானும்

வந்திட வில்லை

 

கேளாமல் தந்தபின்

நிறைவேற்ற மறுத்தால்

கேள்விகள் கேட்பதில்

தவறுமே இல்லை

 

தருவதோ மறுப்பதோ

உனக்குள்ள உரிமை

அதையே நானும்

தடுக்கவும் இல்லை

 

பதில்தர மறுத்து

பிடிவாதம் பிடித்தால்

அதுபற்றிக் கூட

கவலையும் இல்லை

 

உனக்கெது சரியோ

நீயதைச் செய்வாய்

அதுவும் எனக்கு

தெரியாமல் இல்லை

 

உனக்குள்ள உரிமைகள்

எத்தனை உண்டோ

அத்தனை உரிமை

எனக்கும் இருக்கு

 

அவரவர் உரிமையைப்

பற்றிப் பேசிட

நேரம் இதுவா

என்பதைச் சொல்லு

 

அதற்கும் பதிலேதும்

வராது என்றால்

சொல்வதையாவது

கேட்டுக் கொள்ளு

 

ஏதேனும் தருணம்

உன்மனம் இரங்கும்

அப்போது என்னை

நினைவு கொள்ளு

 

அதுவரை நானும்

பொறுமையாய் இருப்பேன்

அதையேனும் நீயும்

கவனத்தில் கொள்ளு

 

அந்த பொறுமைக்கு

உள்ள பலனில்

சற்று இப்போதே

தந்தால் நல்லது

 

குருகுலம், 4-12-2022, இரவு, 3.30 a.m

 

 

1458 You gave the call

 

I know that

This is my call

How I will

Ever miss it

 

When one can

Get this rarely

I will enjoy it

Completely

 

Calling to remain

To live in solitude

Making me to sit

At your feet

 

You shared

One secret

Which none has

Ever heard before

 

I know that

It is a great secret

But I forgot to enjoy it

Completely

 

Drowning in the bliss

That I received

I completely

Forgot me

 

Though there are

Many to do bhakti

Though they remain

Great in their bhakti

 

Calling me

Who is good for nothing

What a wonderful opportunity

You gave to me

 

When you called me

Very near to you

When you are

Very near to me

 

Whichever secret

You might share

I cannot

Understand them

 

How are you going

To understand this secret

You missed it as you

Remain as God

 

Poor indeed are you

As you missed this

Opportunity to remain

As a bhakta

 

When this opportunity

Is available, I would say that

Great indeed is this

Birth as human

 

Many bhaktas have

Told the same

They praised this

Divine call

 

Giving this

Blessed status

Which will remain both

Here and hereafter

 

You gave this

Opportunity to do bhakti

And gave this call

To remain as a bhakta

 

Gurukulam, 4-12-2022, 4.00, a.m.

 

 

As I take care of my mother I have to wake up the whole night to help her to get up from the bed to use the restroom. Several times, after 3.00, even though I cannot sleep, I used to lay down on my bed. So I went to lay down, but unable to catch the sleep as I was tossing on my bed, then I began to think about the present life and what are the challenges and blessings that I receive simultaneously.

 

I am living in a place which I like very much—away from all kinds of noises, situated near the forest.  No artificial sound and best climate in December. Good books to read with deep subjects [Eric Lott: Vedantic Approaches to God, Macmillan Press Let, London, 1980

Daniel O’Connor, The Testimony of C F Andrews, CLS, Madras,  1974 and Richard B. Hays, Echoes of Scripture in the Letters of Paul {particular in Romans], London, Yale University Press, 1989], having special tea with ginger [or strong filter coffee] and biscuits to much [that too onion biscuit], opportunity to serve mother who deserves it and doing my favorite hobby of doing cross stitch work [that too a log carpet using balance threads from other works which might take several years to complete], above all to do bhakti to the Lord who gave such a wonderful call to remain as His bhakta [the bliss which even He does not know].  Then unable to lay down I got up and went to my study room and wrote this song within five minutes so not to miss such a call which He gave to me who never deserves such a life.

 

Saint Manikkavasagar in his Tiruvasagam talks about the same experience in which he says, : The human life is needed Good one on this earth if one can see the arching brows, gentle smile on your red lips; flowing matted hair; holy ash on your body that looks red like coral; the sweet gently lifted leg. [free translation by me]. I share the youtube for those who can understand Tamil.

 

1458 அழைப்பு தந்தாய்

 

எனக்கான வாய்ப்பு

இதுவென அறிவேன்

எப்படி அதனை

நழுவ விடுவேன்

 

அரிதாக ஒருமுறை

கிடைக்கும் போது

முழுதாய் அதையும்

நிறைவேற்றிக் கொள்வேன்

 

தனித்து இருக்க

நீயுமே அழைத்து

தாளின் அருகே

அமர வைத்து

 

இதுவரை ஒருவரும்

கேட்டிருக்காத

உன்னத ரகசியம்

ஒன்றை சொன்னாய்

 

ரகசியம் பெரிது

நானதை அறிவேன்

முழுதாக ரசிக்க

நானும் மறந்தேன்

 

அழைத்த போது

கொண்ட பரவசம்

அதனுள் முழ்கி

மற்றதை மறந்தேன்

 

பக்தி செய்ய

பலர் இருந்தாலும்

பக்தியில் அவரும்

சிறந் திருந்தாலும்

 

எதற்கும் உதவா

என்னையும் அழைது

எத்தனை அறிய

வாய்ப்பினைத் தந்தாய்

 

அருகினில் என்னை

அழைத்த போது

அருகினில் நீயும்

இருக்கும் போது

 

எந்த இரகசியம்

நீ சொன்னாலும்

எனக்கு ஏதும்

புரிந்திருக்காது

 

இந்த இரகசியம்

நீயெங்கு அறிவாய்

இறைவனாய் இருப்பதால்

நீயதை இழந்தாய்

 

பக்தனாய் இருக்கும்

பேற்றினை பாவம்

இறைவன் நீயும்

எப்படி அறிவாய்

 

இந்த வாய்ப்பு

இருக்கும் போது

இந்தப் பிறவியும்

நல்லது என்பேன்

 

பக்தர் பலரும்

இதையே சொன்னார்

பரம அழைப்பை

அவரும் புகழ்ந்தார்

 

இகத்திலும் பரத்திலும்

என்றும் இருக்கும்

இந்த வாய்ப்பை

எனக்குத் தந்து

 

பக்தி செய்யும்

பேறு தந்தாய்

பக்தனாய் வாழ

அழைப்பு தந்தாய்

 

குருகுலம், 4-12-2022, காலை 4,00

 

 

 

 

குனித்த புருவமும்

கொவ்ழைச் செவ்வாயில்

குமிழ் சிரிப்பும்

பணித்த சடையும்

பவளம்போல் மேனியில்

பால் வெண்ணீறும்

இனித்த முடன்

எடுத்த பொற்பாதமும் காணின்

மனித்தப் பிறவியும் வேண்டுவதே

இம்மாநிலத்தே

 

1459 நிறைவு காண்பேன்

 

என்குணம் மாறாது

இதைநீ அறிவாய்

என்னிலை அதனை

நீயும் புரிவாய்

 

அதற்கு ஏற்ப

என்னை நடத்தி

எப்படியோ கரை

ஏற்றியும் விடுவாய்

 

எனது வாழ்வு

எனதாய் இல்லை

முழுதாய் அதைநீ

ஆளவும் இல்லை

 

பலரது குறுக்கீடு

அதிலே உள்ளது

அவரது தேவையும்

அதிலே இருப்பதால்

 

தட்டிக் கழிக்க

இயலாது என்னால்

அவருக்கு என்சேவை

தேவை உள்ளதால்

 

எனக்கென வாழ

எண்ணமே இல்லை

உனக்கென வாழ்வும்

முடியவும் இல்லை

 

பிறர்க்காய் வாழ்வதே

உனக்காய் வாழ்வது

என்பதே உனது

நீதியும் ஆனது

 

அதையே இதுவரை

நானும் செய்தேன்

நீயும் அதன்படி

நடத்தியும் வைத்தாய்

 

எஞ்சிய வாழ்வும்

இதுபோல் இருக்கும்

என்றே நீயும்

சொல்லியும் விட்டாய்

 

இதுதான் உனது

சித்தம் என்றால்

அதன்படி செய்ய

சம்மதம் தந்தேன்

 

அதிலே உனது

ஆளுகை இருந்தால்

அதுவே போதும்

என்றும் சொன்னேன்

 

எனவே என்குணம்

எப்படி இருந்தும்

உனது குணமே

என்னையும் ஆள

 

உனதாய் அதுவும்

இருந்தால் போதும்

அதிலே நிறைவை

நானும் காண்பேன்

 

குருகுலம், 5-12-2022, 1.30 am.

 

1460 உன்செயல் நடக்கும்

எத்தனை முறையே

எண்ணிய போதும்

எத்தனை வகையில்

யோசித்த போதும்

 

சித்தம் உனது

மட்டுமே நடக்கும்

பட்ட அறிவால்

நானுமே சொன்னேன்

 

எனது யோசனை

நல்லதே என்று

எப்படி உன்னிடம்

எடுத்துரைத்தாலும்

 

என்னதான் நீயும்

கேட்டுக் கொண்டாலும்

இறுதி முடிவு

உனதாய் இருக்கும்

 

என்தேவை அதனை

நானுமே எண்ணி

அதற்கு ஏற்ப

யோசனைப் பண்ணி

 

பிறரும் அதையே

ஏற்றிட வேண்டி

பக்குவமாய் நான்

எடுத்து சொல்லியும்

 

என்வழி என்னை

போகவும் விட்டு

அதற்கேற்ப பிறரை

ஆடவும் விட்டு

 

சாதகம் எனக்கு

செய்வது போல

பாவனை பலமுறை

நீயுமே செய்தாய்

 

என்தேவை மீறி

பிறர்தேவை எண்ணி

அதற்கேற்ப காரியம்

முடிவுநீ பண்ணி

 

முன்பாக என்னிடம்

எதையும் சொல்லாமல்

செயலிலே செய்து

நீயும் காட்டுவாய்

 

அப்போது உன்மீது

கோபமும் கொண்டு

உனக்கு எதிராய்

வாதங்கள் செய்து

 

கண்ணீர் சிந்தி

கதறியே அழுதாலும்

காரியம் சாதிக்க

நானுமே முயன்றாலும்

 

கோபமும் குறைய

ஆத்திரம் அடங்க

கதறி அழுது

கத்தி தீர்த்தபின்

 

பொறுமையாய் எனக்கு

எடுத்துக் கூறி

மந்த புத்திக்கும்

புரிய வைத்து

 

இதுபோல் முன்பு

பலமுறை நடந்தது

இப்போதும் அதுதான்

மீண்டும் நடக்குது

 

என்று சொல்லி

இசைய வைத்து

ஏற்றதை மட்டுமே

நீயும் செய்வாய்

 

ஆகவே எப்படி

எண்ணி செய்யினும்

உன்செயல் மட்டுமே

எப்போதும் நடக்குது

 

குருகுலம், 6-12-2022, 4.30 am

No comments: